தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. ஏற்கனவே ரேஷன் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசு தொகை வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் தமிழக கோவில்களில் பணியாற்றும் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை அரசு அறிவித்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 2000 த்தை உயர்த்தி ரூ. 3000 ஆக வழங்குவதாக அறிவிப்பு வெளியானது. அரசின் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒரு கோடியே 17 லட்சத்து 129 பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க ரூ.7.01 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் புதிய விதிமுறைகள்., பொருட்கள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம்!!
பணியாளர்கள் அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.