நடிகர் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோர் மூன்று வயதில் இறந்த தங்கள் மகள் குறித்து ஒரு பேட்டியில் உருக்கமாக பேசி உள்ளனர்.
பெற்றோர் பதிவு:
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி, வசூலில் கல்லா கட்டி வருகிறது. விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சி தன் மகனுக்காக, பல்வேறு தியாகங்களை செய்து இந்த இடத்திற்கு அவரை கொண்டு வந்துள்ளார்.
உயிரிழந்த ரசிகனுக்கு அஜித் நஷ்டயீடு கொடுக்கணும்.., பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஆவேசம்!!
அதேபோல் விஜய்யின் தாய் ஷோபா அவர்களும் மகனுக்கு பல தியாகங்களை செய்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில், மூன்று வயதில் இறந்து போன தங்கள் மகள் குறித்து முக்கிய கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது உங்கள் வாழ்க்கையில் யாரை மிஸ் பண்ணுகிறீர்கள்? என்று கேட்டபோது, என் மகளை இழந்ததை தான் நாங்கள் இப்போதும் மறக்க முடியாமல் தவிக்கிறோம். எங்களுக்கு மட்டுமல்ல தங்கச்சியை இழந்த அந்த தாக்கம் விஜய்யிடம் இன்னும் அப்படியே இருக்கிறது. மூன்று வயதில் எங்களை விட்டு பிரிந்த அவளை இன்னும் எங்களால் மறக்க முடியவில்லை என கண்ணீருடன் பதிவிட்டுள்ளனர். இது குறித்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.