நடிகர் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணிவு திரைப்படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் பீஸ்ட் 2 என்று கிண்டலடித்தாலும் வசூல் சாதனையில் முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சந்தோஷத்தை ரசிகர்கள் கொண்டாட முடியாத அளவிற்கு நேற்று ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
துணிவு படத்தின் ஓப்பனிங் ஷோவை பார்க்க எக்கச்சக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்து வந்தனர். அப்போது ஓடும் லாரியின் மேல் நின்று சிலர் நடனமாடி உள்ளனர். அதில் பரத்குமார் என்ற இளைஞன் கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞனை குறித்து பிரபல ஸ்டண்ட் நடன அமைப்பாளர் ஜாகுவார் தங்கம் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, ஒரு நடிகருக்கு ரசிகர்கள் இருக்கலாம், ஆனால் இந்த அளவுக்கு இருக்க கூடாது. முதலில் உங்களின் தாய் தந்தை உங்களுக்காக பட்ட கஷ்டங்களை பாருங்கள். உங்களை எப்படி வளர்த்திருப்பார்கள். இப்படி இறந்து போனதை நினைத்தால் அந்த குடும்பம் எப்படி தாங்கும்.
மேலும் இறந்த அந்த இளைஞரின் குடும்பத்திற்கு நடிகர் அஜித் இழப்பீடு கொடுத்திருக்கலாம் ஆன கொடுக்கல. அஜித் எல்லாருக்கும் உதவுவார் என்று கேள்வி பட்டிருக்கேன். எனவே அந்த இளைஞனின் குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.