விஜய் டிவியில் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நேற்று மாலை ஆரவாரத்துடன் ஆரம்பித்தது. இது வரையிலும் சமூக வலைத்தளங்களில் வெளியான பிக் பாஸ் போட்டியாளர்கள் பெயரில் பாதி பேர் கலந்து கொண்டனர்.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 4 ஜூன் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட வேண்டியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த பிக் பாஸ் சீசன் நேற்று இனிதே தொடங்கியது. மக்கள் பலரும் எதிர்பார்த்த போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்காக போராடுபவர்கள் பலரையும் பிக் பாஸ் கவுரவித்தது. அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, ஷிவானி நாராயணன், பாலாஜி, ஆரி, ஆஜித், சனம் செட்டி என பலர் கலந்து கொண்டனர். இந்த சீசனில் பல தெரிந்த முகங்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது உள்ளே ஒற்றுமையாக இருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் எப்பொழுது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கலாம்.
மக்கள் கணிப்பு படி ரேகா, சனம் செட்டி, கேபிரியலா போன்றோர் டெரராக இருக்கலாம். ஏனெனில் ரேகா, குக் வித் கோமாளியில் நடந்து கொண்ட விதத்தால் மக்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வந்தனர். மேலும் சனம் செட்டி போன பிக் பாஸில் கலந்து கொண்ட தர்ஷன் முன்னாள் காதலி ஆவார்.
இவர்களுக்கிடையே பல பிரச்சனைகளும் வெடித்தது. மேலும் சனம் வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளருடன் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தற்போது பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் காலையில் அனைவரும் ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகின்றனர். தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களின் இடையே நிலவும் அமைதி, ஒற்றுமை, சந்தோசம் இனி வரும் நாட்களில் நீடிக்குமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் இதில் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ரியோ போன்றோர் ஜெயிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.