மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

0
Gold Jewels
Gold Jewels

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்தது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. வரும் நாட்களில் விலை உயர வாய்ப்பு உள்ளதால் நகை வாங்க இதுதான் சரியான தருணம் என தொழில்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

உலக பொருளாதாரத்தில் பல ஈடுசெய்ய முடியாத இழப்புகளை கொரோனா பரவல் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொழில்துறைகள் முடங்கி பொதுமக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அதோடு விலைவாசி உயர்வும் படாதபாடு படுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவால் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை அதல பாதாளத்திற்கு சரிந்த பொழுது முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்தினர். இதன் விளைவாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால், தேவை அதிகரித்து விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தங்க வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச விலையாகும். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் விலை சற்று குறைந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் மாற்றம் இல்லாமல் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது.

கேன் குடிநீரில் 45 சதவீதம் சுகாதாரமற்றவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கம் ரூ.48 குறைந்து ரூ.4,802 க்கும், ஒரு சவரன் ரூ.384 குறைந்து ரூ.38,416க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.64.10க்கும், ஒரு கிலோ ரூ.64,100க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here