விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வெண்பாவை பற்றிய உண்மைகள் பாரதி, கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவிற்கு விரைவில் தெரிய வரப்போகிறது. எனவே வரும் நாட்களில் பல சுவாரசியமான கட்டங்கள் பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் பலரும் அடுத்து என்ன நடக்க போகிறதோ என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவி தற்போது அடுத்து நடக்கப்போகும் ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளது. அதில் சௌந்தர்யா வெண்பாவிடம் என்ன நடந்தது என விசாரிக்கையில் அவர் வருண் தான் கண்ணம்மாவின் கர்ப்பத்திற்கு காரணம் என்று கூறுகிறார்.
இதனால் சௌந்தர்யா கோவமும் அடைகிறார். வருணை அழைத்து விசாரிக்கையில் அவர் டைரியில் கண்ணம்மா சகோதரன் என்று வருணை குறிப்பிட்டு இருப்பதை சௌந்தர்யா பார்த்து கண்ணம்மாவை நினைத்து கவலையடைகிறார். இதற்கிடையில் துர்காவை 2 ரவுடிகள் கொல்ல வருகின்றனர்.
ஆனால் ரோட்டில் இருந்தவர்கள் அவரை காப்பற்றுகின்றனர். திரும்பவும் கண்ணம்மாவை தேடி அலைகிறார் துர்கா. கண்ணம்மா தற்போது பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்கு காருக்கு பெட்ரோல் போட வருகிறார் பாரதியின் அப்பா. அவரிடம் தப்பிக்கும் கண்ணம்மா துர்காவின் கண்ணில் படுகிறார். அவரை பார்த்ததும் கண்ணம்மா எப்படி இருக்கீங்க அண்ணா?? என்று விசாரிக்கிறார்.
துர்காவும் உங்களை கொலை செய்ய சொன்னது பாரதி இல்லை வெண்பா தான் என்று உண்மையை சொல்கிறார். இதனால் ஷாக் ஆகிறார் கண்ணம்மா. அடுத்து அவர் பாரதியிடமும் சென்று கண்ணம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க எந்த தப்பும் செய்யவில்லை என்று கூறியும் பாரதி நம்பவில்லை.
உடனே துர்கா வெண்பாவிற்கு கால் செய்து ஸ்பீக்கரில் போடுகிறார். வெண்பாவும், என்னடா கண்ணம்மாவை இன்னும் தேடிட்டு இருக்கியா?? என்று கேட்க பாரதி அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார். இதற்கடுத்தாவது பாரதி கண்ணம்மாவை நம்புவாரா?? இல்லையா?? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.