பிக் பாஸ் வீட்டில் கவின் மற்றும் லாஸ்லியா இடையே ஏற்பட்ட காதல் விவகாரம் இருவரது வீட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்தும் கூட தனது காதலை பற்றி எந்த கருத்தும் வெளியிடாத நிலையில் தற்போது கவினை தாக்கி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் லாஸ்லியா.
லாஸ்லியா:
இலங்கை பெண்ணான லாஸ்லியா அங்கு செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். பிக்பாஸ் 3இல் வாய்ப்பு கிடைத்து அதில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் அனைவர்க்கும் செல்லப்பிள்ளையாக இருந்து வந்த லாஸ்லியாவிற்கு தனியாக ஒரு ஆர்மியே உருவாக்கப்பட்டது. அவரின் பேச்சும், செய்கைகளும் மக்களை அவர் பக்கம் ஈர்த்தது. இதனால் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தார்.
ஆரம்பத்தில் கவினுடன் நட்பு ரீதியில் பழகினாலும் நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. இந்த காதலால் பல சர்ச்சைகளும் உருவாகின. பின்பு லாஸ்லியா தனது உண்மையான குணத்தை வெளிப்படுத்த துவங்கினார். இதனால் ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் புகழ் அனைத்தும் தலைகீழாக மாறியது. இருந்தபோதிலும் சில ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த லாஸ்லியாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன.
தற்போது Friendship படத்தில் ஹர்பஜன் சிங் உடன் நடித்து வருகிறார். பிரபல ஹீரோவான ஆரி உடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இதனிடையே தற்போது இன்ஸ்டாகிராமில் கவினை பற்றி மறைமுகமாக கூறும் விதமாக பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் காதலித்தேன், பலவற்றை இழந்தேன், கஷ்டப்பட்டேன், நம்பினேன், சில சமயங்களில் தவறான முடிவுகளை எடுத்தேன் ஆனால் இதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என்று பதிவிட்டுள்ளார்.