பிக் பாஸ் பிரபலம் நடிகை ஆயிஷா தன்னுடைய சமூக வலைதளங்களில் முதன் முறையாக காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிகை ஆயிஷா:
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை ஆயிஷா. இதனை தொடர்ந்து சீரியல் பக்கம் வராமல் இருந்த ஆயிஷா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். இந்நிலையில் உலக நாயகன் தொகுத்து வந்த பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர் நுழைந்த முதல் வாரத்திலே சில சண்டைகள் போட்டு மனமுடைந்து பிக் பாஸை விட்டு போக வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருந்தார். இருப்பினும் அவர் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கு மேல் இருந்தார். மேலும் இந்த ஷோவில் இருக்கும் போது சிவினிடம் லோகேஷ் என்பவரை மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறினார்.
சொன்ன சொல்லை நிறைவேற்றிய அசீம்.., வெற்றி பெற்ற பணத்தை இவங்களுக்கு தான் கொடுக்க போறாராம்!!
இந்த நிலையில் நடிகை ஆயிஷா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது நடிகை ஆயிஷா ஒரு நபரை கட்டி பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் கூடிய விரைவில் ஆயிஷாவுக்கு திருமணம் நடைபெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.