இந்திய அணியின் 360 நாயகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சூர்யகுமார்
ICC T20 தொடருக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி பேட்டிங்கால் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்து வருகிறார். ஆனால் இவர் தற்போது நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன்கள் குவிக்கவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது மூன்று போட்டிகளிலும் 31, 14 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனாலும் இந்த குறைவான ரன்கள் மூலம் சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். அதாவது கடைசி ஒரு போட்டியில் 14 ரன்கள் எடுத்த இவர் அதில் 2 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
இதன் மூலம் சர்வதேச அரங்கில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி கொண்டார். இந்த சாதனை தொடர்ந்து இனி வரும் போட்டிகளில் நிறைய சாதனை படைப்பார் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.