தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் நேர வகுப்புகளை நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
வெளியான உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. அந்த வகையில், மாணவர்களுக்கான பருவ தேர்வுகளும் வழக்கம்போல் ஆஃப்லைனில் நடத்தப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் குறித்த முக்கிய உத்தரவை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் நேரம் வகுப்புகளை எடுக்க வேண்டும் எனவும், இந்த வகுப்புகளில் இவர்களுக்கான பாடத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி!!
வழக்கமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வகுப்புகள் எப்போதும் மற்ற மாணவர்களை விட தாமதமாக தொடங்கப்படுவதால், இதை ஈடுகட்ட இது குறித்த உத்தரவை வெளியிட்டதாக கல்லூரி கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.