நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார்.
ரோஹித் சர்மா
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி மூன்று போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு தொடரை வென்று அசதியுள்ளனர். இதில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 85 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 9 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடங்கும்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன் மூலம் 16 மாதங்கள் கழித்து சர்வதேச தொடர்களில் சதம் விளாசி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். மேலும் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கை அணி வீரர் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் பிடித்துள்ளார். இதை தொடர்ந்து மாபெரும் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
அதாவது சர்வதேச T20 மற்றும் ODI வரலாற்றில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.