பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டுள்ளது. அதாவது இத்தனை வருடங்கள் நாம் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணம் நெருங்கி விட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் தெரிந்து விட அதனை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல வேண்டும் என்று கிளம்பி கொண்டிருக்கிறார். இதனிடையே சௌந்தர்யா நேற்று கால் செய்து ஏன் இத்தனை நாள் போன ஆப் செஞ்சு வச்ச என்று கண்டபடி திட்டிவிட எல்லா பிரச்சனையும் கொஞ்ச நாள்ல தீந்திடும் என்று சமாதானம் செய்து போனை வைத்து விட்டார்.
நடிகை சில்க் ஸ்மிதாவை பற்றி யாருக்கும் தெரியாத அந்த ஒரு விஷயம்.., உண்மையை உடைத்த பிரபல நடிகை!!
இப்படி இருக்க இன்னொரு பக்கம் ஹேமா அப்பாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டுள்ளார். கண்ணம்மா சமாதானம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் பாரதி வீட்டிற்கு வரும் சமயத்தில் தான் வெண்பாவின் சதி திட்டம் அனைத்தும் அவருக்குத் தெரியவரும் . வெண்பா தான் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் மாற்றி வைத்துள்ளார் என்று சொல்லி சௌந்தர்யாவிடம் பாரதி கதறுவாராம். மேலும் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்பாராம். இப்படியாகத்தான் கதை இனிமேல் நகரப் போகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.