பாரதிகண்ணம்மா தொடரில், பாண்டி கண்ணம்மாவிடம் அத்துமீறியதால் கண்ணம்மா பாண்டியை அடித்துவிட்டார். இதனால், கண்ணம்மாவை பழிவாங்க, அவர் மீது தவறான ஒரு பழியை பாண்டி போட்டு விடுகிறார். இதனால் ஊர் முழுவதும் கண்ணம்மாவின் பெயர் கெட்டுப் போகிறது. இதனால் கொந்தளித்த கண்ணம்மா பாண்டியிடம் நியாயம் கேட்க கோபத்துடன் புறப்பட்டு சென்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கண்ணம்மாவின் இந்த நிலையை நினைத்து தாமரை, மற்றும் அவரது கணவர் மிகவும் வருத்தப்படுகின்றனர். இது ஒரு புறம் இருக்க, கண்ணம்மா மீதான பழி தொடர வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு செல்லும் பாண்டி, தனது காரை கண்ணம்மா வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு போகிறார். அப்போ பாரதி வந்து ஏன் இங்க காரை நிறுத்திட்டு போறீங்கன்னு? சண்டைக்கு செல்கிறார். அதன் பிறகு, கணபதி பாரதியை சமாதானம் செய்து அழைத்துச் செல்கிறார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த விஜே பார்வதி., இதுக்கு தான் வந்திருக்கேன், அசீம் ரெடியா என அதிரடி?
இதை தொடர்ந்து கடைக்கு கண்ணம்மா மசாலா எடுத்துச் செல்லும்போது, இனிமேல் உன் மசாலா எல்லாம் எங்களுக்கு தேவையில்லை என கடைக்காரர் உள்ளிட்ட அனைவரும் கேவலமாக பேசுகின்றனர். அதன் பிறகு, பாண்டி நண்பர்கள் எல்லாம் கண்ணமாவை பற்றி கேவலமாக பேசுகிறார்கள். கண்ணம்மாவை அசிங்கப்படுத்தாம? இந்த ஊரை விட்டு போக மாட்டேன் என பாண்டியும், அவர் நண்பர்களிடம் தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவுக்கு வருகிறது.