விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் இடையே பெரிய மோதலே போய்க்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இவ்வளவு புரிதலுடன் இருக்கும் காதல் ஜோடிகள் உண்டா?? என அனைவரும் ரசித்து கொண்டிருந்த ஜோடியை இப்படி பிரியும் படி செய்தது பெரிய ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது.
வெண்பாவின் பல சதிகளால் நாளுக்கு நாள் பாரதி – கண்ணம்மா இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. துர்கா குணமடைந்து எழுந்து வந்து கண்ணம்மாவிடம் உண்மையை சொல்ல வேண்டும் என அவரை தேடி வருகிறார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
வெண்பா தான் நினைத்தது நடந்து விட்டது என சந்தோஷத்தில் இருக்கிறார். வெண்பாவின் முகத்திரை எப்போது வெட்ட வெளிச்சம் ஆகும் என மக்கள் பலர் ஆர்வமாக அந்த சீரியலை பார்த்து வருகின்றனர். நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு போதையில் தள்ளாடி கொண்டே வரும் பாரதி குடும்பத்துடன் சண்டையிடுகிறார்.
தான் வேறு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் சௌந்தர்யா கண்ணம்மாவை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய விட மாட்டேன் என்று சண்டையிடுகிறார். பாரதி வேறு திருமணம் செய்ய போகிறேன் என்று கூறியது சௌந்தர்யாவிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வெண்பாவின் திட்டத்தின் படி பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்வாரா?? துர்கா கண்ணம்மாவிடம் உண்மையை சொல்வாரா?? வெண்பாவின் சதி அனைவருக்கும் தெரிய வருமா?? இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பாப்போம்.