லட்சுமியை அழைத்து கொண்டு சௌந்தர்யாவுடன் போட்டிக்கு செல்லும் கண்ணம்மா – உண்மை தெரியவருமா??

0

சிறந்த மாமியார் மருமகள் போட்டியில் பங்குபெற பாரதி கண்ணம்மா குடும்பமும், ராஜா ராணி குடும்பமும் தயாராகிறது. போட்டியில் இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது என விறுவிறுப்பாக ஒளிபரப்பாகவுள்ளது சிறப்பு தொடர்.

மெகா சங்கமம்

இன்றைய சிறப்பு தொடரில், சௌந்தர்யாவின் உடல் நலத்தை பற்றி விசாரிக்கிறார் வேணு. நீ ரிலாக்ஸ் ஆகுறதுக்கு எங்கேயாவது வெளியூர் போயிட்டு வரலாமா என கேட்கிறார் வேணு. அப்போது லேடீஸ் கிளப்பில் இருந்து வரும் சிலர், சிறந்த மாமியார் மற்றும் மருமகள் என்ற போட்டி நடத்துகிறோம். இந்த போட்டிக்கு பரிசு கொடுக்க நீங்க வரணும் என கூறுகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த போட்டியில் நானும் போட்டியாளராக கலந்து கொள்ளலாமா என கேட்கும் சௌந்தர்யா, போட்டிக்கு ஒப்புக்கொள்கிறார். கண்ணம்மா எப்படி இதற்கு ஒத்துக்குவா என வேணு கேட்க, அகிலனிடம் கண்ணம்மாவின் வீட்டு அட்ரஸை அனுப்பி விட சொல்லிவிட்டு கண்ணம்மா வீட்டுக்கு கிளம்புகிறார் சௌந்தர்யா.

அடுத்ததாக வீட்டில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் சரவணனின் அப்பா, பேப்பரில் வந்த சிறந்த மாமியார் மருமகள் போட்டியை பற்றி சரவணனிடம் கூறுகிறார். எப்படியாவது அம்மாவை சம்மதிக்க வைக்கலாம் என சொன்ன சரவணன் பேப்பரில் வந்த போட்டியை பற்றி சிவகாமியிடம் கூறுகிறார். போட்டி ஒரு வாரம் நடக்கும் என கூற அவர்கள் இருவரையும் திட்டி விட்டு கிளம்புகிறார் சிவகாமி.

‘சினிமாவுக்கு வராததுக்கு காரணமே அவதான்’ – நடிகை கவுதமி ஓபன் டாக்!!

அங்கு கண்ணம்மா வீட்டுக்கு வரும் சௌந்தர்யா, பேத்தியை பற்றி கேட்கிறார். பின்பு சௌந்தர்யாவின் உடல்நலத்தை பற்றி விசாரிக்கிறார் கண்ணம்மா. என் மேல உனக்கு பாசம் இருக்கா என கேட்ட சௌந்தர்யா, என்கூட வந்து ஒரு வாரம் தங்கணும் என்று கேட்கிறார். பின்பு போட்டியை பற்றி கண்ணம்மாவிடம் கூறுகிறார் சௌந்தர்யா.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போட்டிக்கு வர ஒப்புக்கொள்கிறாள் கண்ணம்மா. ராஜா ராணியில், சிறந்த மாமியார் மருமகள் போட்டியை பற்றி சந்தியாவிடம் கூறுகிறார் சரவணன். வீட்டிற்கு வரும் சௌந்தர்யா, கண்ணம்மா ஓகே சொன்னதை சொல்லி சந்தோசப்படுகிறார். ஒரு வார டூர் பற்றி பாரதியிடம் கேட்கவும், பாரதி வரவில்லை என மறுக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் பும்ராஹ் – வைரலாகும் திருமண புகைப்படம்!!

கார்ப்பரேஷன் வேலை நடப்பதால் இன்னும் ஒரு வாரத்துக்கு கடையை திறக்கக்கூடாது என கடைக்காரர் ஒருவர் வந்து சொல்ல, வெளியூர் போக சம்மதம் சொல்லுகிறார் சிவகாமி. துளசியையும் கூட வரச்சொல்லி கண்ணம்மா வருந்தி அழைக்கிறார். பிறகு லட்சுமி, துளசி கண்ணம்மா மூவரும் போட்டி நடக்கும் இடத்துக்கு கிளம்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here