‘சினிமாவுக்கு வராததுக்கு காரணமே அவதான்’ – நடிகை கவுதமி ஓபன் டாக்!!

0

80ஸ் மற்றும் 90ஸ் காலத்தில் நடிகைகளில் முன்னை நடிகையாக இருந்தவர் கவுதமி. தற்போது சினிமாவில் இருந்து அவர் எதற்கு விலகியுள்ளார் என்பதனை மனம் திறந்து பேசியுள்ளார்.

கவுதமி:

இவர் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளர், ஆடை வடிவாமிப்பாளர், நாடக நடிகை ஆகிய துறைகளில் வலம் வந்தார். பின்பு தனது சினிமா வாழ்க்கையை தெலுங்கு துறையில் இருந்து துவக்கினார். இவர் ‘தயமாயுடு’ என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் முன்ணனி நடிகையாக வளம் வந்தார். இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலத்தில் மிக பிரபலமான நடிகையாக உருவெடுத்தார். இவர் மற்றும் ரஜினிகாந்த கூட்டணியில் வெளிவந்த குருசிஷ்யன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படம் இவரது மார்க்கெட்டை அடுத்த லெவலுக்கு தூக்கி சென்றது. அதன்பின்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் சில ஆண்டுகளில் அதில் பிளவு ஏற்பட்டது. இருந்தும் தன்னம்பிக்கையை விடாமல் தனது வாழ்க்கையை தனது மகள் சுப்புலெட்சுமியுடன் வாழ்ந்து வந்தார் கவுதமி. ஆனால் சினிமாவிற்கு அதிக இடைவெளியும் விட்டுள்ளார் கவுதமி. தற்போது இதுகுறித்து தனது மனம் திறக்கிறார் கவுதமி. அவர் கூறியதாவது எனது மகளுக்கு எனது கடந்த காலம் மற்றும் நிகழ் காலம் என அனைத்தும் தெரியும்.

‘காருக்குள் கவர்ச்சி’ – வைரலாகும் யாஷிகாவின் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

அதுமட்டுமல்லாமல் அவளுக்கு சினிமா மீது ஆர்வம் கிடையாது. அவளால் தான் நான் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போது அவளது வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டது. இனி வரும் காலங்களில் நான் சினிமாவில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று அனைத்து இயக்குனருக்கும் அறிவிக்கும் வகையில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தற்போதைய காலங்களில் நாடுகளுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். இந்த நேரத்தில் சினிமா துறையில் கவுதமி மீண்டும் தனது கால் தடத்தை பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here