தமிழ்நாட்டுக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் பும்ராஹ் – வைரலாகும் திருமண புகைப்படம்!!

0

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராஹ் இன்று தமிழகத்தினை பூர்விகமாக கொண்ட பெண்ணான சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கிரிக்கெட் துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் பும்ராஹ்

தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்ற அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீப காலத்திற்கு முன்பு இந்தியா அணியில் இணைத்து தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தவர் என்ற பெருமை உடையவர் தான், கிரிக்கெட் வீரர் பும்ராஹ். தனது சுழற்பந்து வீச்சு காரணமாக இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் என்று கூட சொல்லலாம். இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக சர்வதேச போட்டியில் விளையாடினார். தற்போது வரை இவர் 19 டெஸ்ட் போட்டிகள், 50 டி20 போட்டிகள் மற்றும் 67 ODI போட்டிகளில் விளையாடியுள்ளார்.

10 நிமிடத்தில் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி – கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

27 வயதான பும்ராஹ் கடந்த ஆண்டு முதல் நடிகை அனுபமாவுடன் காதலில் உள்ளார் என்று கிசுகிசுக்கபட்டார். இதனை அடுத்து இரு தரப்பினரும் இது குறித்து எந்த வித தகவலையோ அல்லது பதிலையோ கூறவில்லை. இதனை அடுத்து அவர் தற்போது இங்கிலாந்திற்கு எதிரான போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவர் அனுபமாவை திருமணம் செய்து கொள்வதற்காக தான் இவ்வாறாக போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது ஒரு புறம் இருந்தாலும் பும்ராஹ் டிவி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சஞ்சனா தமிழகத்தினை பூர்விகமாக கொண்டவர் என்பது கூடுதல் தகவல். இவர்களுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here