சிறந்த சின்னத்திரை நடிகைகளுக்காக நடத்தப்பட்ட சர்வேயில் விஜய் டிவியின் பிரபல தொடரான ‘பாரதி கண்ணம்மா’ நாயகி முதலிடத்தை பிடித்துள்ளார். அடுத்த நான்கு இடத்தை பிடித்த நாயகிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகைகள்
வெள்ளித்திரை நாயகிகளை விட சின்னத்திரை நாயகிகளுக்கு தான் ரசிகர்களிடையே மவுஸ் அதிகமாகவே இருக்கும். ஏனென்றால் பெரிய திரை நாயகிகள் திரையில் தோன்றும் காட்சிகள் ஒரு படத்தில் வெறும் ஒருமணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான் இருக்கும். ஆனால் சின்னத்திரை நாயகிகள் ஒரு நாளைக்கு அரைமணி நேரம் என்ற அளவில் ஒவ்வொரு நாளும் திரையில் வருவார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதனால் தான் சீரியலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும், ரசிகர்கள் தன் வீட்டு பிள்ளை போலவே பார்ப்பார்கள். மக்களிடையே இவர்களுக்கு கிடைக்கும் ரீச் அளவும் வெள்ளித்திரை நாயகிகளை விட அதிகம் தான். குறிப்பாக சீரியலில் நடிக்கும் கதாநாயகர்களை விட, நாயகிகளுக்கு தான் ஏகப்பட்ட ரசிகர் கூட்டமே உண்டு.
தளபதி 65ல் விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
அந்தவகையில் தமிழ் தொடர்களில் நடிக்கும் நாயகிகளில், சிறந்த நாயகிகளுக்கான சர்வே ஒன்றை தனியார் இணையம் நடத்தியது. அந்த சர்வேயில் முதல் ஐந்து இடங்களை பிடித்த நாயகிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் நாயகியான நடிகை ரோஷினி ஹரிப்ரியன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நாயகி காவ்யா உள்ளார். தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலின் நாயகி பிரியங்கா இடம் பிடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தின் அடிப்படையில் ‘பாக்கியலட்சுமி’ தொடரின் நாயகி சுஜித்ராவும், ‘செம்பருத்தி’ தொடரின் நாயகி ஷபானா ஷாஜகானும் உள்ளனர். இந்த தகவலால் தொடரின் நாயகிகளுடன் சேர்ந்து அவர்களது ரசிகளும் உற்சாகத்தில் உள்ளனர்.