இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த கண்ணம்மா – கண்கலங்கிய பாரதி!! சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0
barathi kannama

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் எப்பாழுது கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்கும் என்று மக்கள் பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தனர். நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு, பாரதி பிரசவம் பார்க்க ஒத்துக் கொண்டார். இன்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு இரட்டை பெண் குழந்தை பிறக்கிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு நாட்களாக பல விறுவிறுப்பான சம்பவங்கள் போய்க்கொண்டிருந்தது. வெண்பாவின் வலையில் கண்ணம்மா எளிதாக சிக்கிக்கொண்டார். மேலும் துர்காவையும் காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்தார் வெண்பா. துர்கா அதிலிருந்து தப்பித்து கண்ணம்மாவை தேடி அலைகிறார். கண்ணம்மா வலியில் துடிக்க அவரை பார்த்து வெண்பா ஏளனமாக சிரிக்கிறார்.

barathi kannama

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அருகில் இருந்த நர்ஸையும் வெளியே அனுப்பி விட்டார் வெண்பா. கண்ணம்மாவிற்கு நினைவு திரும்புகிறது. அங்கிருக்கும் வெண்பாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். விஷ ஊசியை போட போகும் வெண்பாவை பார்த்து கெஞ்சுகிறார் கண்ணம்மா. அப்பொழுது சரியான நேரத்திற்கு வந்த துர்கா அவரை காப்பாற்றுகிறார்.

barathi kannama

இந்நிலையில் கண்ணம்மா பிரசவ வலியால் துடிக்க அங்கிருக்கும் நர்ஸ் பாரதியை பிரசவம் பார்க்க அழைக்கிறார். கண்ணம்மாவை பார்த்து கோவமடையும் பாரதி பின் பிரசவம் பார்க்க ஒத்துக் கொள்கிறார். இதோடு நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது.

barathi kannama

இன்றைய எபிசோடில் பாரதி, கண்ணம்மாவிற்கு தெரியாமல் இடையில் திரை போட்டு அவருக்கு பிரசவம் பார்க்கிறார். மேலும் வலியால் துடிக்கும் கண்ணம்மாவை பார்க்க பாரதிக்கு கண் கலங்குகிறது. எப்படியோ கண்ணம்மாவிற்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறக்கிறது.

barathi kannama

குழந்தையை கையில் ஏந்திய பாரதிக்கு தன் குழந்தை என்ற உணர்வு ஏற்பட கண் கலங்குகிறார். குழந்தையை பிரிய மனம் இல்லாமல் நர்ஸ் இடம் குழந்தையை கொடுத்து விட்டு செல்கிறார் பாரதி. அதன் பிறகு சௌந்தர்யா வேண்டுதலை முடித்து விட்டு வர குழந்தை பிறந்த செய்தியை அறிந்து மகிழ்ச்சியடைகிறார். குழந்தையை பார்க்க உள்ளே செல்கிறார் சௌந்தர்யா.

barathi kannama

இந்நிலையில் மீண்டும் பிரசவ வலியால் துடிக்கும் கண்ணம்மாவிற்கு மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் மகிழ்ச்சியடையும் சௌந்தர்யா குழந்தையை தூக்கி ஆனந்த கண்ணீர் விடுகிறார். மேலும் வெண்பா துர்காவிடம் அங்கு பிரசவம் பார்க்க யாரும் இல்லை கண்ணம்மா சாவது உறுதி என்று நக்கலாக பேசுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

barathi kannama

இப்பொழுது குழந்தையை கையில் ஏந்திய பாரதிக்கு கண் கலங்கியதை வைத்து பார்க்கும் போது அவருக்கு தன் குழந்தை என்ற உணர்வு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. வெண்பா கண்ணம்மாவை கொல்ல முயற்சித்ததை சௌந்தர்யாவிடம் கண்ணம்மா சொல்ல அதிக வாய்ப்பு உள்ளது.  அகிலனுக்கு ஏற்கனவே வெண்பா மீது சந்தேகம் உள்ளது. இப்பொழுது குழந்தை பிறந்ததும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்தல் கண்டிப்பாக வெண்பாவின் சதி திட்டம் வெட்ட வெளிச்சம் ஆகும். இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here