‘ஹேமா பாரதிக்கும் வெண்பாவிற்கும் பிறந்த குழந்தை தான்’ – தவறாக புரிந்துகொள்ளும் கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் 8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா பாரதியின் வீட்டில் காலெடுத்து வைக்கிறார். இதில் கண்ணம்மாவிற்கு குழப்பம் என்னவென்றால் ஹேமா இந்த குடும்பத்தில் யார் என்பது தான். மேலும் இது பாரதி வெண்பாவிற்கு பிறந்த குழந்தை என்று நினைத்து கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் வீட்டிற்கு சமைக்க வரும் கண்ணம்மாவை பார்த்து குடும்பமே மகிழ்ச்சியாகிறது. உள்ளே கண்ணம்மா வேலை பார்த்துக்கொண்டுள்ளார். மேலே சௌந்தர்யா அகிலன் வேணு அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது அகிலன் அண்ணியை இங்கேயே இருக்க சொல்லலாம் என்று சொல்ல சௌந்தர்யா யோசிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அகிலன் இதுதான் நமக்கு சரியான நேரம் இதனை விட்டால் அண்ணியை பார்க்க முடியாது என்று சொல்ல கண்ணம்மா இத்தனை நாட்கள் ஓடி ஒளிந்ததை நினைத்து தற்போதும் வீட்டை விட்டு காலி செய்து விடுவாரோ என்று பயப்படுகிறார். அதன் பிறகு கண்ணம்மாவிற்கு ஹேமாவை பார்க்க அது வெண்பாவின் குழந்தை என்று நினைத்து கொள்கிறார்.

மேலும் வீட்டில் கண்ணம்மாவை விளக்கேற்ற பிளான் செய்யும் சௌந்தர்யா அதனை நிரைவேற்றுகிறார். அதாவது சௌந்தர்யா தீப்பெட்டி கேட்டு கத்த யாரும் இல்லாததை பார்த்து கண்ணம்மாவே எடுத்து வருகிறார். அதன்பின் கையில் எண்ணெயாக இருப்பதாக சொல்லி கண்ணம்மாவையே விளக்கேற்ற சொல்லுகிறார்.

குக் வித் கோமாளி செட்டில் அஸ்வினுக்கு ஷிவாங்கி கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ!!

கண்ணம்மாவும் விளக்கேற்றுகிறார். அடுத்ததாக ஹேமாவும் கண்ணம்மாவும் என்ன சமைக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்க அப்பொழுது சௌந்தர்யா வந்து கண்ணம்மாவை கிண்டல் செய்கிறார். என்ன செய்றாங்க உங்க சமையல் அம்மா என்று நக்கலாக கேட்க கண்ணம்மா முறைக்கிறார்.

மேலும் ஹேமாவிடம் உங்க சமையல் ஆண்டிக்கு பேருலாம் இல்லையா?? என்று கேட்க ஹேமா கண்ணம்மாவிடம் உங்க பெயர் என்ன என்று கேட்கிறார். அதற்கும் எதுவும் பதில் முழித்துக்கொண்டுள்ளார் கண்ணம்மா. ஒரு பக்கம் இப்படி இருக்க மற்றொரு பக்கம் லட்சுமி அந்த ஆட்டோ ட்ரைவரை படாத பாடு படுத்துகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here