மேற்கு வங்க மாநில ரயில் நிலையத்தில் அம்மாநில அமைச்சர் மீது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மீது குண்டு வீச்சு
மேற்வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், நிம்திதா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறையின் இணை அமைச்சர் ஜாகீர் உசைன் ரயிலுக்காக காத்திருந்தார். நேற்று புதன்கிழமை அங்கிருந்து கொல்கத்தா செல்லும் ரயிலுக்காக காத்திருந்த அவர் மீது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜாகீர் உசைன் மற்றும் அவருடன் இருந்த சில அரசு அதிகாரிகள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முர்ஷிதாபாத் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் கூறியுள்ளதாவது, ‘குண்டுகள் வெடித்ததில் அமைச்சரின் ஒரு கை மற்றும் ஒரு காலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
14 வது ஐபிஎல் மினி ஏலம் – யாரை முதலில் ஏலத்தில் விடப்போகிறார்கள் தெரியுமா??
அமைச்சர் மற்றும் அவருடன் காயமடைந்த அதிகாரிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர் ஜாகீர் உசைன் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.