பாரதி கண்ணம்மா சீரியலில் தனது ஹவுஸ் ஓனர் பற்றிய உண்மைகளை கண்ணம்மாவே நேரில் பார்க்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் திடீரென சௌந்தர்யா பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. உண்மை எப்பொழுது தான் வெளிவரும் என பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு சௌந்தர்யா தனது பேத்தியை பார்க்கிறார். அதிலிருந்தே சௌந்தர்யா மிகவும் சந்தோசமாக இருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் கண்ணம்மா சுமதியை பார்க்க கீழே வர அவரது கணவர் செய்யும் கொடுமையை நேரிலேயே பார்க்கிறார். இன்றைய எபிசோடில் கண்ணம்மா சுமதியின் கன்னத்தில் இருக்கும் காயத்தை பற்றி விசாரிக்கிறார். மறுபடியும் சுமதி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக பொய் சொல்கிறார்.
கண்ணம்மா தான் அனைத்தையும் பார்த்து விட்டதாக சொல்கிறார். கதறி அழும் சுமதி இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை சொல்கிறார். காதலித்து தான் திருமணம் செய்துகொண்டோம், திடீரென அவருக்கு வேலை போய்விட்டது. அதிலிருந்து அவருக்கு வேலை கிடைக்காததால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார்.
கண்ணம்மா அவரை முதலில் திருத்தி கொண்டு வருவோம் என்று கூறுகிறார். அடுத்ததாக ஹேமாவை காட்டுகின்றனர். ஹேமா லக்ஷ்மியை பற்றி பேசுகிறார். தனக்கு புது நட்பு கிடைத்து விட்டதாக சந்தோஷமடைகிறார். காலையில் இருந்து பாட்டியை காணோமே என்று அனைவரும் சௌந்தர்யாவை தேடுகின்றனர். அகிலன் உள்ளே சென்று சௌந்தர்யா அழைக்க அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்.
அகிலன் அனைவரையும் கத்தி அழைக்க அனைவரும் பதறிக்கொண்டு வருகின்றனர். ஹேமா பாட்டியை பாக்கணும் என்று ஹாஸ்பிடலில் கதறுகிறார். பாரதி எல்லா டிரீட்மென்ட்டையும் பார்க்கிறார். சௌந்தர்யா உயிர் பிழைப்பாரா?? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.