பும்ராஹ்-சஞ்சனா கணேசன் திருமணம் – செல்போனுக்கு தடை!!

0

இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ராஹ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசன் இருவருக்கும் இடையே திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு உறவினர்கள் செல்போன் கொண்டுவர கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

பும்ராஹ்-சஞ்சனா:

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராஹ் தற்போது நீண்ட நாள் விடுப்பு எடுத்து சென்றுள்ளார். இதன் காரணமாக இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் என்று தெரியவந்துள்ளது. தற்போது இவரது நீண்ட விடுப்பிற்கு காரணம் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது என்று அறிவித்தனர். முதலில் இவருக்கும் நடிகை அனுபமாவிற்கும் தான் திருமணம் என்று தகவல் தொடர்ந்து வெளியானது. சில தினங்களுக்கு பின்பு இதனை அனுபமா தாயார் மறுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நேற்று பும்ராஹ் மற்றும் பிரபல தொகுப்பாளினி சஞ்சனா கணேசன் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இவர்கள் இருவருக்கும் வருகிற 14 மற்றும் 15ம் தேதிகளில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த திருமணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம். இங்கிலாந்து தொடர் காரணமாக இந்திய அணியினர் இதில் பங்கேற்கமாட்டார்கள்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – 7வது இடத்திற்கு முன்னேறிய ரிஷாப் பாண்ட்!!

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இருவீட்டார் தரப்பில் மொத்தம் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர். இவர்களது திருமணம் கோவாவில் வைத்து நடைபெறவுள்ளது. மேலும் இந்த திருமணத்தை ரகசியமாக நடத்துவது போல் தெரிகிறது. காரணம் இந்த திருமணத்திற்கு வரும் உறவினர்கள் யாரும் செல்போன் எடுத்து வர கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here