கோலத்தை அழிக்கும்போது கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் வெண்பா – சௌந்தர்யாவிடம் இருந்து தப்பிப்பாரா??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி தனக்கு டிரீட்மென்டர் பார்த்த விஷயம் தெரியவர அந்த பணத்தை அவரிடம் தந்துவிட வேண்டும் என்று கோலப்போட்டியில் கலந்துகொள்கிறார். அதனை கெடுக்க வரும் வெண்பா ஒரு சிறுவனிடம் மாட்டிக்கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா

துளசி வீட்டிற்கு வந்ததும் தனது மருத்துவம் பார்த்த செலவை பற்றி கேட்கிறார். துளசியும் அனைத்து உண்மையையும் சொல்லிவிட நொறுங்கி போகிறார். யார் யார் முன்னாடி தைரியமா வாழணும்னு நெனச்சோமோ அவன் கையாலேயே பொழைக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு என்று கவலையடைகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக எப்படியாவது லக்ஷ்மியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் பாரதியிடம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் நினைக்கிறார். அதற்கு அந்த கோலப்போட்டியில் ஜெயிப்பது தான் சரியாக இருக்கும் என்று அதற்கும் தயாராகிறார்.

இந்த விஷயம் வெண்பாவிற்கு தெரிய முதலில் இதனை அசால்டாக எடுத்துக்கொண்டாலும் அடுத்ததாக சௌந்தர்யா அதில் கலந்துகொள்கிறார் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறார். ஏற்கனவே கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் சந்தித்துக்கொண்டது தெரியாததால் சந்தித்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்.

குக் வித் கோமாளி புகழ் செய்த காரியம் – குவியும் வாழ்த்துக்கள்!!

எப்படியாவது இதனை தடுக்க வேண்டும் முழு முயற்சி செய்கிறார். கண்ணம்மா இதில் கலந்துகொள்வதை பார்த்த சௌந்தர்யா இப்படி தான் காசு சம்பாதிக்கணுமா?? என்று கோவமடைகிறார். கண்ணம்மா கோலத்தை படிப்பு சம்பந்தமாக வரைய அந்த கோலம் அனைவரையும் ஈர்க்கிறது.

தொடர்ந்து பல உள்ளே வரும் வெண்பா யாரும் இல்லாத சமயம் பார்த்து கோலத்தை அழித்துவிட பிளான் செய்கிறார். குழாயில் தண்ணீர் பிடித்து தண்ணீர் ஊற்ற போக அங்கு வரும் ஒரு சிறுவன் அதனை வீடியோ எடுத்து விடுகிறான். இதனை பார்த்த வெண்பா அவனை வெளியே போக சொல்ல அதை கேட்காமல் வெண்பாவை மிரட்டுகிறான்.

அதற்குள் அங்கு சௌந்தர்யா அனைவரும் வந்து விட வெண்பா ஒளிந்துகொள்கிறார். சௌந்தர்யா கண்ணம்மா கோலத்தை பார்க்க விடாமல் என்ன செய்வது என்று யோசிக்கிறார். சௌந்தர்யாவின் இணைந்து கொள்ளும் வெண்பா கண்ணம்மாவின் கோலத்தை மட்டும் பார்க்க விடாமல் தடுக்கிறார். கடைசியில் கண்ணம்மாவின் கோலத்தை பார்த்து விடுகிறார் சௌந்தர்யா.

அந்த கோலம் அவருக்கு மிகவும் பிடித்து போக அதனை போட்டோ எடுக்கிறார். மேடைக்கு வரும் சௌந்தர்யாவை பார்க்கும் கண்ணம்மா அங்கிருந்து செல்ல முயற்சிக்கிறார். அப்பொழுது சுமதி கண்ணம்மாவை தடுத்து உள்ளே அழைத்து வருகிறார். இதனை எப்படி தடுப்பது என்று வெண்பா தீவிரமாக யோசித்துக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here