மீண்டும் உயர்ந்த தங்க விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

0

தமிழகத்தில் இன்று ஆபரண தங்க விலை கிராமுக்கு அதிகபட்சமாக உயர்ந்து இன்று மக்களை கதி கலங்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தங்க விலை இன்று

தங்கம் என்பது இந்திய மக்களை பொறுத்தவரை பொக்கிஷமாக கருதப்படுகின்றது. இதன் காரணமாகவே தங்கம் மக்கள் மத்தியில் அதிக அளவில் போற்றப்படுகின்றது. அதே போல் தங்க விலை தினமும் ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. கடந்த பொது முடக்கத்தின் போது தங்க விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் தங்கம் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

குக் வித் கோமாளி புகழ் செய்த காரியம் – குவியும் வாழ்த்துக்கள்!!

இப்படியான சூழலில் தங்க விலை கடந்த மாதம் முதல் தொடர்ந்து சரிந்து வருகின்றது. ஆனால், இன்று மக்கள் மனதில் பீதியினை ஏற்படுத்துவது போல் மீண்டும் உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து 4,355 என்ற நிலவரத்தில் விற்கப்படுகிறது. அதே போல் ஒரு சவரன் 192 ரூபாய் உயர்ந்து 34,840 என்ற நிலவரத்தில் விற்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது இப்படியாக இருக்கிறது என்றால் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 73.30 என்று விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி 73,300 என்று விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை நிலவரத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here