கண்ணம்மா விட்ட சவாலில் கொலை நடுங்கிய வெண்பா – பல திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து பல பரபரப்பான சம்பவங்கள் நமக்காக காத்திருக்கிறது. நேற்றைய எபிசோடில் பிறந்தநாள் விழாவுக்கு வரும் சௌந்தர்யாவும், கண்ணம்மாவும் சந்திக்கின்றனர். சௌந்தர்யா இருவரையும் சேர்த்து வைப்பதாக சபதமும் எடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று எதிர்பாராத பல விஷயங்கள் நடந்தேறியது. மேலும் கண்ணம்மாவிற்கு சாதாரணமாக வேலை கிடைத்தது என்று பார்த்தால் அதுவும் சௌந்தர்யாவின் திட்டம் தான். ஆனால் இது கண்ணம்மாவிற்கு தெரிய வந்தால் இங்கிருந்தும் சென்று விடுவார். நேற்று பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா சௌந்தர்யாவை பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சௌந்தர்யா கண்ணம்மாவை பார்த்து கண்ணீர் விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். மேலும் சௌந்தர்யா குழந்தை எங்கே? என கேட்க சொல்ல மாட்டேன் என்று கூறி அந்த இடத்தை விட்டு செல்கிறார். அதன் பின் பாரதியிடம் பேசிக்கொண்டிருக்கும் நண்பன் குழந்தையை காண செல்கிறார். அப்பொழுது எதேச்சையாக அந்த இடத்திற்கு வரும் கண்ணம்மா பாரதியை பார்க்கிறார். பாரதியும் கண்ணம்மாவை கோவமாக பார்க்கிறார்.

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். அதை தூரத்தில் இருந்து பார்க்கும் சௌந்தர்யா அவர்களை போட்டோ எடுத்து ரசிக்கிறார். சௌந்தர்யா போட்டோ எடுத்ததை பார்த்த பாரதி கோபமடைந்து அங்கிருந்து செல்கிறார். அதன் பின் பிறந்தநாளுக்கு கேக் கட் செய்து சௌந்தர்யா, பாரதியிடம் கொடுக்க பாரதி வாங்க மறுக்கிறார்.

அப்பொழுது குழந்தை அழுக கண்ணம்மா அங்கு செல்கிறார். சௌந்தர்யாவும் குழந்தையை பார்க்க செல்கிறார். தன் பேத்தியை தூக்கி கொஞ்சுகிறார். இதை பார்த்த பாரதி கடுப்பாகி அங்கிருந்து செல்கிறார். பின்பு வீட்டிற்கு வரும் கண்ணம்மா துளசியிடம் நடந்தவற்றை கூறுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

துளசி கண்ணம்மாவிடம் பாரதி திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?? என்று கேட்க கண்ணம்மா அப்படி இல்லை, என் குழந்தை உன்னை மாறி அப்பா இல்லாமல் வளர கூடாதுனு நினைக்கிறேன் என்று சொல்கிறார். அதன்பின் வெண்பா, கண்ணம்மா அறைந்ததை நினைத்து வீட்டில் கொலை காண்டில் உள்ளார். வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து அலறுகிறார்.

நான் கண்ணம்மாவிடம் தோற்க கூடாது என்று கத்துகிறார். மேலும் இப்படி சோர்ந்து போய் உட்காரக்கூடாது என ‘ரகிட ரகிட’ பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். அந்த சமயம் பார்த்து பாரதி வீட்டிற்குள் வர வெண்பா, கண்ணம்மாவை பற்றி கண்டபடி பேசி பாரதிக்கு மேலும் கோவத்தை தூண்டி விடுகிறார்.

மேலும் வெண்பாவை கன்னத்தை சேர்த்து அறைகிறார். இனிமேல் கண்ணம்மாவின் குழந்தையை என் குழந்தை என்று சொன்னால் கொன்னுடுவேன் என்றும் மிரட்டுகிறார். இதனால் வெண்பா சந்தோஷத்தில் துள்ளுகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here