2வது நாளாக அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

0

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்திருந்த நிலையில், இன்றும் விலை சரிந்திருப்பது நகைப்பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. பண்டிகை காலமும் நெருங்கி உள்ளதால் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா பாதிப்பு பல ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் இந்தியா போன்ற நடுத்தர வருமான நாடுகளில், பங்குச்சந்தை கடுமையாக சரிந்தது. இதனால் பாதுகாப்பு கருதி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களின் மீது முதலீடுகள் அதிகரிக்க, அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்த தங்கத்தின் விலை, ஆகஸ்ட் மாத மத்தியில் சவரனுக்கு 43 ஆயிரம் ரூபாயாக உச்சத்தை தொட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் குறைந்து தங்கத்திற்கான தேவை அதிகரித்ததும் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்து மீண்டும் 39 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சென்றது. இன்றும் விலை சற்று குறைந்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 11 ரூபாய் குறைந்து ரூ.4,679 க்கும், ஒரு சவரன் ரூ.88 சரிந்து 38,152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் வெள்ளியின் விலை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.67.40 ஆகவும், ஒரு கிலோ ரூ.67,400 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here