தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொது முடக்கம்:
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. பொது முடக்கம் முழுமையாக 4 மாதங்கள் பின்பற்றபட்டு வந்த நிலையில் மக்களின் பொருளாதார நலன் கருதி தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மத்திய அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கலாம் என்றும் அதற்கு கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதே போல் மாநில அரசு தங்களது மாநிலங்களில் உள்ள சூழலை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர ஆலோசனை:
ஆனால், இந்த உத்தரவுக்கு அரசியல் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள் என்று பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தார். இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து நவம்பர் 9 ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 60 சதவீத பெற்றோர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என்று தங்களது முடிவினை தெரிவித்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனாலும், சிலர் திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் தீவிரமான ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவு நாளை அறிவிக்கப்படும் என்றும் அந்த முடிவு தான் இறுதியானது என்றும் அரசுத்துறை வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.