ராதிகாவை செழியன் திருமணத்திற்கு அழைக்கும் பாக்கியா – பரபரப்பான கதைக்களத்துடன் ‘பாக்கிய லட்சுமி’!!

0

விஜய் டிவி சீரியல் என்றாலே டாப் ரேட்டிங் தான். வெள்ளித்திரையில் உள்ளது போலவே பல காதல் கதைகளை விஜய் டிவி சீரியலாக எடுத்து வருகிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பிரபல சீரியல்கள் வரிசையில் தற்போது பாக்கிய லட்சுமியும் இணைந்துள்ளது.

பாக்கிய லட்சுமி

பாக்கிய லட்சுமி சீரியலில் செழியனுக்கும் ஜெனிக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் எப்படியோ முட்டிமோதி திருமணத்தை நடத்திவிட்டார் பாக்கியா. முந்தைய எபிசோடில் பாக்கியா திருமணத்தை நடத்த செழியனின் பாட்டியிடம் போராடினார் என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்படியோ சமாதானம் செய்து செழியனுக்கும் ஜெனிக்கும் திருமணம் நடந்தேறியது. இதனால் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனாலும் செழியன் பாட்டிக்கு கடுப்பாகவே உள்ளது. விட்டு கொடுக்க கூடாது என்ற மனப்பக்குவதிலேயே உள்ளார்.

இந்நிலையில் செழியனுக்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடக்கவுள்ளது. இதற்கு செழியனின் பாட்டி சிவகாமி சம்மதிக்கவில்லை. இன்றைய எபிசோடில் செழியனின் திருமணத்திற்காக ராதிகாவை அழைக்க திட்டமிடுகிறார் பாக்கியா. இதனால் வீட்டிற்கு சென்று ராதிகாவை திருமணத்திற்கு அழைக்க அவரும் வருவதாக ஒத்துக்கொள்கிறார். அடுத்ததாக செழியனை ஜெனி வீட்டில் மரியாதையுடன் நடத்துகின்றனர்.

ஊரைவிட்டே செல்ல முடிவு செய்யும் கண்ணம்மா – அதிர்ச்சியில் துளசி!!

மேலும் கார் வாங்கி தருவதாகவும் சொல்கிறார் ஜெனியின் அப்பா. இப்படியே செழியனுக்கு ஜெனி வீட்டில் நேரம் போகிறது. செழியனின் பாட்டி அவர் இன்னும் வராததை நினைத்து அழுகிறார். அனைவரும் சமாதானம் செய்ய அப்பொழுது ஜெனியின் அப்பாவுடன் செழியன் வருவதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். சிவகாமி செழியனை வேகமாக உள்ளே அழைத்து செல்கிறார்.

இதனால் ஜெனியின் அப்பாவிற்கு என்னவோ போல் ஆகிறது. பாக்கியா வெளியே இருந்து செழியனை அழைக்க சிவகாமி அவன் வர மாட்டான் என்று சொல்லிவிட மனவருத்தத்துடன் வெளியே செல்கிறார் ஜெனியின் அப்பா. இதோடு எபிசோடு முடிவடைகிறது. நாளைய தினத்தில் நடக்க இருக்கும் திருமணத்தில் ராதிகா கலந்துகொண்டால் பாக்கியாவின் கணவர் பற்றிய உண்மைகள் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here