‘கண்ணம்மாவ பழிவாங்க, வெண்பா வாழ்க்கைய அழிக்கனுமா??’ குழப்பத்தில் பாரதி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் எதிர்பாராத விதமாக பல சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் வெண்பாவை திருமணம் செய்ய பாரதி வேறு ஒத்துக்கொள்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் பாரதி எதார்த்தமாக வெண்பா வீட்டிற்கு வர யாரும் இல்லாததை பார்த்து உள்ளே செல்ல வெண்பாவின் சித்தப்பாவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதன் பிறகு வெண்பாவும் அங்கே வர பாரதியிடம் ஏதேதோ பொய் சொல்லி சமாளிக்கிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!திருமணத்தை பற்றியும் பேசுகின்றனர். கண்ணம்மா வேறு பாரதியை டெஸ்ட் எடுக்க கூப்பிட்டும் அவர் வருவதாக இல்லை. இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் குழந்தைக்கு நல்லபடியாக ஆபரேஷன் நடந்த நிலையில் குழந்தையை பார்க்க உள்ளே செல்கிறார்.

குழந்தையிடம் கண்ணம்மா பாரதியை பற்றி பெருமையாக கூறுகிறார். உன் அப்பாவிடம் அந்த சந்தேகம் மட்டும் இல்லையென்றால் உன்னை ராணி போல பாத்துகிட்டு இருப்பார். அவரு ஆள் மனதில் யாரோ நம்மை பற்றி தவறான பதிச்சுருக்காங்க. அது கண்டிப்பா வெண்பாவாக தான் இருக்கும்.

மத்தபடி உன் அப்பா ரொம்ப நல்லவர் என்று கூறுகிறார். அடுத்ததாக பாரதி ஹாஸ்பிடலில் கண்ணம்மாவுடன் வருணை பார்த்ததை நினைத்து அதிரமடைகிறார். நடுஇரவில் ரோடில் குடித்துக்கொண்டும் உள்ளார் கண்ணம்மா. வெண்பாவை திருமணம் செய்துகொள்வது சரி தானா?? நியாயமா?? என்று யோசித்துக்கொண்டுள்ளார்.

கண்ணம்மாவை பழிவாங்க போய் வெண்பா வாழ்க்கையை அழிக்கணுமா?? இவ்வாறு பல கேள்விகள் பாரதியிடம் ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் கடைசியாக வெண்பாவை கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார். பாரதியின் வீட்டில் அறிவு குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டுள்ளார். அப்பொழுது பாரதி குடித்துக்கொண்டு வர அப்பொழுது சௌந்தர்யா கால் செல்கிறார். பாரதி குடித்த விஷயம் தெரிய கோவமடைகிறார். அடுத்ததாக கண்ணம்மாவை காட்டுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

துளசி கண்ணம்மாவிடம் குழந்தையை பற்றி விசாரிக்க பாரதி ஆபரேஷன் செய்ததை சொல்கிறார். இதனால் துளசியும் சந்தோஷமடைகிறார். மேலும் தன் சம்பள பணத்தை துளசியிடம் கொடுக்க அதனை வாங்க மறுக்கிறார். கடைசியாக துளசி வாங்கி கொள்கிறார்.

அடுத்ததாக கண்ணம்மா தான் இந்த ஊரை விட்டே செல்லப்போவதாக சொல்ல துளசி ஷாக் ஆகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது எப்படியோ பாரதிக்கு கூடிய விரைவில் உண்மை தெரியவர போகிறது தெரிகிறது. நாமும் வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here