கர்ப்பமான மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கும் தனம் – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. தற்போது, மீனா தனது குழந்தையுடன் ஜீவாவின் வீட்டிற்கு வந்ததை மையமாக வைத்து கதை அமைகிறது. மேலும் தனம் கர்ப்பமாக உள்ளாரா? என்ற சந்தேகமும் நம்மிடையே அதிகம் உண்டாகியுள்ளது. அதற்கான விடை இன்றைய எபிசோடில் கிடைக்கும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இன்று ஜனார்த்தனன் மீனாவை அவரது வீட்டிற்க்கு அழைத்து கொண்டுபோவதாக சொல்கிறார். அதற்கு ஜீவாவின் அம்மா மறுப்பு தெரிவிக்கிறார். மீனாவும் ‘நான் இப்போது வீட்டுக்கு வரவில்லை அப்பா’ என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும், ஜனார்த்தனன் குழந்தையை டாக்டரிடமாவது அழைத்து செல்லலாம் என கூறி அழைத்து செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது ஜீவாவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் தனத்தை வேற காணவில்லை, என்று கூறி முல்லையிடம் புலம்புகிறார். இதற்கிடையில், தனம் கோவிலில் சாமியிடம் பக்தியுடன் வேண்டுகிறார். இது குழந்தையாக இருந்தால் நல்ல இருக்கும் என்றும், கண்டிப்பாக குழந்தையாக தான் இருக்கவேண்டும் என்றும் சாமியிடம் வேண்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார் தனம்.

ஜனார்த்தனன், மீனா, கலை மூவரும் குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். டாக்டர் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தைக்கு ஒன்னும் இல்லை என்றும் கூறிவிட்டார். அப்போதும் ஜனார்த்தனன், மீனாவை தனது வீட்டிற்க்கு வருமாறு வற்புறுத்துகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால், மீனா தான் ஜீவாவிடம் கேட்டு வருவதாக கூறுகிறார். வீட்டிற்கு வந்த தனம், தான் கர்ப்பமாக இருக்கிறோமா என்று பரிசோதித்து பார்க்கிறார். அப்போது தான் தனத்திற்கு தெரிகிறது தான் அம்மாவாக போகிறோம் என்பது. சந்தோஷத்தில் கண்ணீர் பெறுக பெறுக ஆனந்த வெள்ளத்தில் மிதக்கிறார் தனம். இதோடு இன்றைய எபிசோடு முடிந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here