ராமர் கோவில் கட்டுவதன் மூலம் நாட்டில் ராம ராஜ்ஜியம் உருவாகும் என்று அடிக்கல் நாட்டு விழாவிற்கு வைத்த பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.
ராமர் கோவில் விழா:
இன்று பலரும் எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கொள்ளைகளமாகவும் சிறப்பாகவும் நடந்து முடிந்தது. இதனால் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அடிக்கல் நட்டு விழா குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பாபா ராம் தேவ்:
இந்த சிறப்பு மிக்க விழா குறித்து பாபா ராம் தேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது ” இந்த கோவிலை கட்டுவதன் மூலமாக இந்தியாவில் புது கலாச்சாரம் உருவாகும். நாட்டில் கலாச்சாரம், அரசியல் அமைப்பு சீர்படும். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் ஆகும். இந்த நாளை நாம் அனைவரும் கண்டு கழித்துள்ளோம். இதற்கு இறைவனுக்கு தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
உலகம் முழுவதும் இந்தியாவை தான் பார்த்து கொண்டு இருக்கிறது. இது உலகத்திற்கு நமது ஒற்றுமையை காட்டுகிறது. பதஞ்சலி சார்பில் இங்கு அயோத்தியில் ஒரு குருகுலம் ஒன்று நிறுவ திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதல்வர் அனுமதி!!
அதில் அனைவரும் வேதம் மற்றும் ஆயுர்வேதம் கற்பார்கள். மோடி அவர்களை பிரதமரை அடைய நாம் குடுத்து வைத்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.