பாக்கியலட்சுமி சீரியலில் கணேஷ் அமிர்தாவை கடத்திச் சென்றதால் குடும்பத்துக்குள் பல பிரச்சனைகள் வெடிக்கிறது. மேலும் அனைத்திற்கும் காரணம் பாக்கியா தான் என கோபி, ஈஸ்வரி அவரை வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். இன்னொரு பக்கம் பழனிச்சாமியின் உதவியுடன் அமிர்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அமிர்தாவுடன் பாக்கியா எழில் வீட்டுக்கு வருவதை பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுவார்களாம்.
TNPSC யின் குரூப் 1 தேர்வில் பணியிடங்கள் இவளோ தான்? அப்போ கண்டிப்பா இது தேவை? மாஸ் அப்டேட்!!!
ஆனால் நடந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என கோபி பாக்கியாவை அசிங்கமாக பேசுவாராம். மேலும் அவருடன் சேர்ந்து கொண்டு ராதிகாவும் பாக்கியாவை சத்தம் போட எழில் செழியனுக்கு கோபம் வந்து விடுமாம். உடனே அவர்கள் எங்க அம்மாவை திட்ட நீங்க யாரு என சத்தம் போடுவார்களாம். அப்போது கோபி எழில், செழியனை சத்தம் போடுவாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கியா கோபத்தில் என்னை சத்தம் போட நீங்க யாரு. இது என்னோட வீடு. வீட்டை விட்டு வெளியே போங்க என சொல்லி விடுவாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ராதிகா கோபியுடன் வெளியே செல்வாராம்.