தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அரசு துறைகளில் பணிபுரிய மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் போட்டி தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப பல்வேறு போட்டித் தேர்வுகளை மத்திய மாநில அரசின் தேர்வாணையங்கள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “அடுத்த 8 நாட்களுக்குள் சுமார் 28,000 முதல் 29,000 பதவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில், அதிக அளவிலான ஆட்சேர்ப்புகளை, நடப்பு ஆட்சி நடத்தி உள்ளது. அதேபோல் தேர்வு செயல்முறையும் வெளிப்படைத்தன்மை கொள்கைகளை கடைபிடித்தே நடைபெற்றுள்ளது.” என கூறி உள்ளார்.