அவ என்னோட பொண்டாட்டி.., சண்டை போடும் எழில் & கணேஷ்.., அமிர்தா எடுக்கும் முடிவு என்ன??

0
அவ என்னோட பொண்டாட்டி.., சண்டை போடும் எழில் & கணேஷ்.., அமிர்தா எடுக்கும் முடிவு என்ன??
அவ என்னோட பொண்டாட்டி.., சண்டை போடும் எழில் & கணேஷ்.., அமிர்தா எடுக்கும் முடிவு என்ன??

பாக்கியலட்சுமி சீரியலில் கணேஷ் உயிருடன் தான் இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்து எழில், அமிர்தா இருவரும் சுக்கு நூறாக நொறுங்கிப் போகின்றனர். மேலும் கணேஷ் அமிர்தாவிடம் நம்ம வீட்டுக்கு போலாம் என எவ்வளவோ கூப்பிடுகிறார். ஆனால் அவர் வர மறுக்கிறார். இப்படி இருக்கையில் எழில் அமிர்தா இருவரும் வீட்டுக்கு வர குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி உண்மையை சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஆனால் எழில் கோவிலில் நடந்த விஷயத்தை சொல்ல குடும்பத்தில் உள்ள எல்லோரும் அதிர்ச்சியாகின்றன. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் தவித்துக் கொண்டிருக்க கணேஷ், அவரின் அம்மா அப்பா வருகின்றன.

Enewz Tamil WhatsApp Channel 

அப்போது கணேஷ் அமிர்தாவை என்னுடன் அனுப்பும்படி சண்டை போடுகிறார். ஆனால் வீட்டில் உள்ள எல்லோரும் அமிர்தா எழிலோட பொண்டாட்டி. அவளையும், நிலா பாப்பாவையும் நாங்க அனுப்ப முடியாது என சொல்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் உங்க யார்கிட்டயும் நான் பேச வரவில்லை. எதுனாலும் அமிர்தாவே சொல்லட்டும் என்கிறார். அமிர்தாவின் முடிவுக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் அமிர்தா யாரும் எதிர்பாராத விதமாக எனக்கு எழில் தான் முக்கியம். நான் அவர் கூட தான் வாழ்வேன் என சொல்லி விடுவாராம். இதை கேட்டு கணேஷ் எதுவும் பேச முடியாமல் கதறி அழுவாராம்.

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இதற்கு அனுமதி கிடையாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here