பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பல எதிர்ப்பாராத திருப்பங்கள் நடந்து கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பக்கம் செழியனை ஜெனி பிரிந்து விட விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விடுகிறார். இதனால் செழியன் நொந்து போய் விடுகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது கணேஷ் மீண்டும் வந்ததை எப்படி வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வது என்று பாக்கியா முழித்து கொண்டிருக்கிறார். மேலும் அமிர்தா கணேஷை பார்த்தும் விடுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கி விழுந்து விட எழிலும் கணேஷை பார்த்து விடுகிறார்.
இனி என்ன பூகம்பம் வெடிக்க போகிறது என்று தான் தெரியவில்லை. இந்நிலையில் கணேஷ் சட்டப்படி போலீசிடம் செல்வாராம். எனது மனைவி, குழந்தைகள் எனக்கு வேண்டும் என்று புகாரளிப்பாராம். இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வர போகிறார்கள் என்பது தான் இனி வரும் காட்சிகளில் இருக்க போகிறது.