நாடு முழுவதும் தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலனோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகர்புறங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் ரயில் பாதைகளை அமைக்க மத்திய ரயில்வே துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் 50,000 கிலோ மீட்டருக்கு நவீனப்படுத்தப்பட்ட ரயில் பாதையை அமைத்து, இயக்கங்களின் வேகங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக ரூ.7 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்படி அமலுக்கு வரும் பட்சத்தில் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள்., மக்களுக்கு முக்கிய அறிவிப்பு., அதிகாரிகள் எச்சரிக்கை!!