விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில் மீதமுள்ள 10 போட்டியாளர்களில் யார் கோப்பையை வெல்வார் என்ற கருத்து கணிப்பு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் மாயா செய்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது நேற்றைய (டிசம்பர் 24) எபிசோடில் அதிரடியாக சரவணன் விக்ரம் வெளியேறினார். எனவே அவர் வெளியேறும் பொழுது அனைத்து ஹவுஸ் மேட்ஸ் குறித்தும் நல்ல கருத்துகளை தெரிவித்தார்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனாலும் மாயா தனது முகத்தை கடுமையாக மாற்றி மிகக் கோபமாக காட்சியளித்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் வெளியேறும் கதவு திறந்திருந்த பொழுது வெளியே எட்டிப் பார்த்து அங்கு செல்ல முயற்சி செய்தார். இதை அறிந்த பிக் பாஸ் உடனடியாக, ‘மாயா இனிமேல் இப்படி செய்யாதீர்கள்’ என்று எச்சரிக்கை கொடுத்தார். எனவே நெட்டிசன்கள், இந்த வீட்டிற்கு நீங்கள் தகுதியற்றவர், மிக மோசமான அணுகுமுறை, விக்ரம் உங்களுக்கு உண்மையாக இருந்தார், ஆனால் நீங்கள் அவரை முதுகில் குத்திவிட்டீர்கள் என மாயா தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரயில் பயணிகளே., ரூ.7 லட்சம் கோடியில் ரயில் பாதை அமைக்க திட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!