எதிர் நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பக்கம் குணசேகரன் தான் நினைத்ததெல்லாம் நடக்க போகிறது என்ற ஆணவத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய ஆப்பு இனி தான் காத்திருக்கு என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குணசேகரன், ஜான்சி ராணி, கரிகாலனுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார். இதை வைத்து நந்தினி, ரேணுகா கிண்டல் செய்கின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அடுத்ததாக நீண்ட நாட்களுக்குப் பிறகு சீரியலில் வாசு என்று கொடுக்கிறார். அப்போது வாசு குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். இதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அப்போது நந்தினி உள்ள போனா தேவையில்லாத பிரச்சனை வரும். இங்கேயே உட்கார்ந்து பேசலாம் என்று சொல்கிறார். உடனே வாசு நான் பிரச்சனை செய்றதுக்காக தான் இங்கு வந்திருக்கிறேன் என்று சொல்ல எல்லோரும் சிரிக்கின்றனர். பின் வீட்டிற்கு வரும் வாசுவை பார்த்து குணசேகரன் அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
மாயாவின் மோசமான அணுகுமுறை… இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!