விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்டிருந்தவர் தான் ஷெரீனா. மாடலிங் துறையில் கலக்கிவரும் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுபோக அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இப்படி இருக்கையில் இவரிடம் கார் டிரைவராக பணியாற்றிய கார்த்திக் என்பவர், இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் ஷெரீனாவின் மேலாளர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். அப்போது தான் சில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கார் டிரைவருடன் ஷெரீனாவுக்கு சில வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திகை வேலையில் இருந்து ஷெரின் தூக்கிவிட்டாராம். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது நண்பருடன் இணைந்து ஷெரீனாவுக்கு கொலை மிரட்டல் மற்றும் செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.