நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வதற்கான முறைகளை அவ்வப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநில குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த விவாகரத்து வழக்கு விசாரணையை, இடமாற்றம் செய்வதற்கான மனு பரிசீலிக்கப்பட்டது. அந்த மனுவில் கணவன் மற்றும் மனைவி இருவரின் ஜாதியும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து மனுதாரரின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கூறுகையில், “மாவட்ட, மாநில மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் போது, மனுதாரரின் மதம் அல்லது ஜாதியை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தி உள்ளது.எனவே இந்த நடைமுறையை கைவிட வேண்டும்.” என தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து நீதிமன்றப் பதிவாளா் அலுவலகங்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.