விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பிட்ட சில சம்பவங்கள் ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும். அந்த வகையில் இதில் போட்டியாளராக கலந்து கொண்ட நிக்சன் மற்றும் ஐஷு இருவரும் செய்த செயல்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்திருந்தது. இந்நிலையில் இந்த ஷோவை விட்டு வெளியேறிய ஐஷு நிக்சனுடன் தன்னை பற்றி இணையத்தில் பரவி வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.
அதாவது அந்த ஷோவிற்குள் நாங்கள் இருவரும் நெருங்கி பழகியது தவறு என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அந்த ஷோவை விட்டு வெளியே வந்த பிறகு தான் நான் செய்த தவறை உணர்ந்தேன். அதோடு அர்ச்சனாவுடன் ஒரு இரவில் நான் கடுமையாக சண்டை போட்டேன். என்னுடைய குரலை உயர்த்தி பேசியதை வீட்டுக்கு வந்த பிறகு டிவியில் பார்த்து மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு நான் பேசியிருக்கக் கூடாது. மேலும் எனக்கு நடந்த ஒன்றை மாற்றும் வாய்ப்பு கிடைத்தால், அந்த இரவில் அர்ச்சனாவுடன் நடந்து கொண்டதை மாற்றிவிடுவேன்.