ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாக பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் பரிவர்த்தனைகள், பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் முடக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் இருந்து Paytm நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி பெண்கள் 2 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.., ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தல்!!
இதன்மூலம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் Paytm FASTag பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் Paytm FASTag பயன்படுத்தும் எட்டு மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவர்கள், உடனடியாக மற்றொரு வங்கியுடன் போர்ட் செய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.