அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் பத்தாம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, அக்டோபர் மாதத்தில், தேர்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. அதனால், தமிழக அரசு இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்தது. இருப்பினும், கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
எப்போதும், பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். ஆனால், இந்த கொரோனா பொது முடக்கம் காரணமாக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. அதனால், இந்த பருவத்திற்கான தேர்வுகளை அக்டோபர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆரம்பிக்கப்படு. சனிக்கிழமை கூட ஆன்லைன் வகுப்புகள் இருக்கும். இந்த வகுப்புகள் அக்டோபர் 26 தேதி வரை நடைபெறும்.
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10ல் முதல்வர் அறிவிப்பு!!
தேர்வுகள் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்த பருவத்திற்கான ஆன்லைன் வகுப்புகள் டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.