இனி தங்கத்தை மியூசியத்தில் தான் பார்க்கணும் போல – சவரன் 43 ஆயிரத்தை தாண்டிருச்சு!!

0
Gold Jewels
Gold Jewels

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாபாதிப்புடன் சேர்ந்து தங்கத்தின் விலையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இன்றும் சவரன் 368 ரூபாய் அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு 43 ஆயிரம் ரூபாயை விலை தாண்டி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தங்கத்தின் விலை:

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து வித தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு அடிமட்டத்திற்கு சென்று விட்டன. ஊரடங்கில் அளிக்கப்பட்ட சில தளர்வுகளில் தொழில்துறைகள் மீண்டும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்பட தொடங்கி உள்ளன. இந்நிலையில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவனம் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மீது அதிகளவு இருப்பதால் அதன் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

gold jewels
gold jewels

தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10ல் முதல்வர் அறிவிப்பு!!

இன்று சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் 46 ரூபாய் அதிகரித்து ரூ.5,420 ஆகவும், ஒரு சவரன் 368 ரூபாய் உயர்ந்து 43,360 ரூபாயாகவும் உள்ளது. அதாவது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளது சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. வெள்ளியின் விலையும் தங்கத்திற்கு போட்டியாக அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 2.20 ரூபாய் அதிகரித்து ரூ. 83.80 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here