தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல்
2021ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கூட்டணிக்கான இடஒதுக்கீடுகளை அறிவித்து வருகிறது. அதே சமயத்தில் சில கட்சிகளில் இடஒதுக்கீடு பிரச்சனைகளும் நடந்து வருகிறது. அதே போல ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
உடற்பயிற்சி செய்யும் வீடீயோவை பதிவிட்ட நடிகை சமந்தா – வாயடைத்துப் போன ரசிகர்கள்!!
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவரும், டில்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னதாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆம் ஆத்மி கட்சியினர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தற்போது நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.