இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது நான்காவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் கோஹ்லி மற்றும் ஸ்டோக்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை யார் வெல்ல போகிறார் என்பது இந்த போட்டி மூலம் தெரியவரும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. மேலும் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் சிப்லே 2, கிராவிலே 5, ரூட் 5 மற்றும் பேரிஸ்டோ 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
#INDvsENG 4 வது டெஸ்ட் – 4 விக்கெட்டை இழந்து திணறும் இங்கிலாந்து அணி!!
மேலும் இன்றைய போட்டியில் முகமத் சிராஜ் ஸ்டாக்ஸை தனது பவுன்சரால் தாக்கினர். இவரது பந்துவீச்சை ஸ்டோக்ஸ் எதிர்கொள்ள திணறினார். இந்நிலையில் சிராஜ் ஸ்டோக்ஸ் அருகே சென்று அவரிடம் ஏதோ கூறினார். இதனால் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு இதில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியும் இணைந்தார். அப்போது கோஹ்லி-ஸ்டோக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு களநடுவர்கள் இவர்களை சமாதானம் செய்தனர்.