பெண்கள் ஓட்டை கவரும் எடப்பாடி – இது என்ன புது யுக்தியா?? ஜெயிக்குமா அதிமுக அரசு!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக கட்சி பெண்கள் ஓட்டை குறிவைப்பது போல் தெரிகிறது. பெண்கள் வாக்கை மட்டும் பெற்று தேர்தலில் வெற்றி பெற திட்டமிடுகிறதா அதிமுக? இவரது தேர்தல் அறிக்கையும் பெண்களை குறிவைத்தாகவே உள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் தற்போது தேர்தல் களமே சூடுபிடிக்க துவங்கியுள்ளது. காரணம் இன்னும் 20 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து வேட்பாளர்களும் மின்னல் வேகத்தில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். நடைபெறவுள்ள தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதில் அதிக குழப்பம் நிலவி வருகிறது. காரணம் இந்த தேர்தலில் கமல்ஹாசன் புதிதாக களம் கண்டுள்ளார். இவரது வருகை தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது விரைவில் தெரியவரும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதற்கு திட்டம் தீட்டி வருகிறது. அதற்காக இந்த தேர்தலில் அவர்கள் அதிகமாக பெண்கள் வாக்கை குறிவைப்பது போல் தெரிகிறது. காரணம் அதிமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் பெண்களை கவரும் வண்ணத்தில் தான் இருந்தது. ஏற்கனவே பெண்கள் வாக்கை பெறுவதற்கு மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்கிய அதிமுக தற்போது மாடர்னாக யோசித்துள்ளனர்.

ஜெயலலிதா இறந்ததுக்கு காரணமே திமுக தான் – ஜெயக்குமார் பகிரங்க பேட்டி!!

அதன்படி இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பெண்களுக்கு இலவசமாக வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்று அறிவித்தனர். மேலும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500, பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு கட்டண சலுகை, மகளிர் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி போன்ற பெண்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை அதிமுக இந்த தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்த தேர்தலில் பெண்கள் வாக்கை வைத்து 234 தொகுதியையும் வெல்ல அதிகமுக புது யுக்தியை கையாள்வது போல் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here