ஜெயலலிதா இறந்ததுக்கு காரணமே திமுக தான் – ஜெயக்குமார் பகிரங்க பேட்டி!!

0

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக கட்சி தான் காரணம் என்று அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா:

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சரும் மற்றும் அதிமுக கட்சியின் தலைவரும் தான் ஜெயலலிதா. இவர் உடல் நல குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். இவரது மறைவிற்கு பின்பு தமிழகத்திலும் அதிமுக கட்சியிலும் மிக பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது. முதலில் அதிமுகவிற்குள் சசிகலா நுழைந்தார். பின்பு அவர் சொத்துகுவிப்பு வழக்கிற்காக சிறைக்குள் நுழைந்தார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் அதிர்ந்து போகும் வகையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் திமுக கட்சியினுள்ளே பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என ஆதரவாளர் இரு அணிகளாக பிரிந்தனர். என்ன தான் அவர்கள் வெளியில் ஒற்றுமையாக இருப்பது போல் காட்டினாலும், கட்சியினுள் முடிவுக்கு வராத பல பிரச்சனைகள் உள்ளது. தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஓர் குற்றம் சாட்டியுள்ளார்.

என்ன தான்டா நடக்குது அங்க?? புதுவையில் தலைமை செயலாளர் பதவி நீக்கம்!!!

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்ததற்கு திமுக தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். திமுக கட்சி கொடுத்த மன உளைச்சல் காரணமாக தான் ஜெயலலிதாவின் உடல் நிலை மோசமானது. ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து மன உளைச்சலை கொடுத்தது திமுக தான் என்று கடுமையாக திமுகவை சாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here