தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – அதிமுக வேட்பாளர் நேர்காணல் துவக்கம்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது அதிமுக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நேர்காணலை இன்று துவங்க உள்ளனர். இந்த நேர்காணல் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

அதிமுக:

தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடுவதற்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று கடைசி நாள் என்பதால் நேற்று மட்டும் மொத்தம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இதுவரை மொத்தமாக அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 8,200 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் நேர்காணலை துவங்க உள்ளனர். இந்த நேர்காணல் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உட்பட 9 பேர் கொண்ட குழு தலைமையில் நடைபெறவுள்ளது.

‘நான் அரசியலை விட்டு விலகுகிறேன்’ – சசிகலா அதிரடி அறிவிப்பு!!

இந்த நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. மேலும் இந்த வேட்பாளர் நேர்காணல் காலை மற்றும் மாலை என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முதலாக அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வேட்பாளர் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here